Tamilnadu
ஆபாசப் படத்திற்கு அடிமை.. 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் இளைஞர் கைது: வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
மும்பையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் ஏற்கனவே 17 முறை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 முதல் 2020ம் ஆண்டுவரை இவர் மீது 17 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே ஆபாசப் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையான இவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!