Tamilnadu
ஆபாசப் படத்திற்கு அடிமை.. 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் இளைஞர் கைது: வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
மும்பையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் ஏற்கனவே 17 முறை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 முதல் 2020ம் ஆண்டுவரை இவர் மீது 17 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே ஆபாசப் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையான இவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!