Tamilnadu
ஜன்னலை எட்டிப்பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாப பலி!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சோபாவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஜன்னலை குழந்தை எட்டிப்பார்த்திருக்கிறது. எதிர்பாராத விதமாக 7வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கீழே சென்று பார்த்தபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் இருந்தது. பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7வது மாடியின் வீட்டு ஜன்னலிலிருந்து தவறி விழுந்த குழந்தைக்கு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!