Tamilnadu
திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவி தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த தானம்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் வரம்பியம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் காயத்ரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் காயத்ரியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து காயத்ரியின் கணவர் பார்த்திபன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!