Tamilnadu
திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவி தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த தானம்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் வரம்பியம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் காயத்ரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் காயத்ரியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து காயத்ரியின் கணவர் பார்த்திபன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!