Tamilnadu
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர காரியம்: விசாரணையில் பகீர்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா தவறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளதாகக் கூறி அவரை ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ரிஷியாவின் உடற்கூறு ஆய்வில் அவரது தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் ஹரிஷை பிடித்து விசாரணை செய்ததில், மனைவி சில ஆண்டுகளாக வேறு சில ஆண்டுகளுடன் தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளார். இதை கண்டித்தும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவரது தலையில் கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!