Tamilnadu
ரேஸ் பைக்குகளில் ஸ்லைடிங் நம்பர் பிளேட்.. டிராஃபிக் போலிஸிடம் சிக்கிய விற்பனையாளர்கள்: சென்னையில் அதிரடி!
பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்த கடை உரிமையாளர்களை போக்குவரத்து போலிஸார் கைது செய்தனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை சிறப்பு வாகன தணிக்கை ஒன்றை நடத்தி விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை மட்டும் சோதனை நடத்தினர். அதில் சுமார் 100 வாகன ஓட்டிகள் sliding number plate என்று சொல்லப்படும் நம்பர் பிளேட்டை மறைத்து வைக்கும் படியான வகையில் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் எந்தெந்த பைக் கடைகளில் இது போன்ற நம்பர் பிளேட்டுகள் மாற்றி தரப்படுகிறது என்பது போக்குவரத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சென்னை அண்ணாசாலை கதீட்ரல் கார்டன் சாலையில் உள்ள "சென்னை பைக்கர்ஸ்" என்ற கடையிலும், ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள "நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்" ஆகிய 2 கடைகளிலும் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் கடைகளில் சோதனை நடத்தி 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்ததாக 2 கடைகளின் உரிமையாளர்களான பிரவீன்குமார், சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
அந்த இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!