Tamilnadu
“தாயை அறையில் பூட்டி கொடுமைப்படுத்திய கொடூர மகன்”.. சாதுர்யமாக மீட்ட போலிஸாரை பாராட்டிய காவல் ஆணையர்!
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தாய் அமலா மற்றும் தங்கையின் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர்களை வீட்டின் அறை ஒன்றில் பூட்டிவைத்துள்ளார்.
இந்நிலையில், அமலா காவல்நிலையத்திற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். பிறகு கோடம்பாக்கம் தலைமைக் காவலர் பெருமாள், காவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சதிஷ்குமார் பூட்டிய அறையை திறக்கமாட்டேன் என போலிஸாரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தலைமை காவலரையும் தாக்கியுள்ளார். இருப்பினும் போலிஸார் அவரிடம் பொறுமை காத்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் அமலா மற்றும் தங்கையின் குழந்தையை மீட்டனர்.
பின்னர் அமலா மகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர்கள் பெருமாள், செல்வகணேஷ் ஆகிய இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!