Tamilnadu
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை.. வாலிபருக்கு தூக்குத் தண்டனை : போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கடந்த 2018ஆம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்காக சிறுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியைத் தடுத்து நிறுத்தி அவரது தலையைத் தனியாகத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் தினேஷ் குமார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு போக்சோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடிவில், தினேஷ்குமார் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி கோக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அத்தொகையைச் சிறுமி குடும்பத்திற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!