Tamilnadu
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை.. வாலிபருக்கு தூக்குத் தண்டனை : போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கடந்த 2018ஆம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்காக சிறுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியைத் தடுத்து நிறுத்தி அவரது தலையைத் தனியாகத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் தினேஷ் குமார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு போக்சோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடிவில், தினேஷ்குமார் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி கோக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அத்தொகையைச் சிறுமி குடும்பத்திற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!