Tamilnadu
டேங்கர் லாரி மீது மோதிய கார்.. 6 மாத குழந்தையும், தந்தையும் பரிதாப பலி : உறவினர்கள் சோகம்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்வினிகுமார். இவரது மனைவி சிவபாக்கியம். இந்த தம்பதிக்குத் திவானா (2) என்ற மகளும் 6 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றுள்ளனர். பிறகு இன்று அதே காரில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வாகனம் செங்கல்பட்டு அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அஸ்வின்குமார் மற்றும் 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவபாக்கியம், மகள் திவானா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் படுகாயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்த தந்தை மற்றும் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 6 மாத குழந்தையும், தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !