Tamilnadu
டேங்கர் லாரி மீது மோதிய கார்.. 6 மாத குழந்தையும், தந்தையும் பரிதாப பலி : உறவினர்கள் சோகம்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்வினிகுமார். இவரது மனைவி சிவபாக்கியம். இந்த தம்பதிக்குத் திவானா (2) என்ற மகளும் 6 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றுள்ளனர். பிறகு இன்று அதே காரில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வாகனம் செங்கல்பட்டு அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அஸ்வின்குமார் மற்றும் 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவபாக்கியம், மகள் திவானா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் படுகாயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்த தந்தை மற்றும் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 6 மாத குழந்தையும், தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!