Tamilnadu
சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் கடுமையாக தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் பீராராம். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இருவர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் வைத்து அடுப்பில் சப்பாத்தி சுடும்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த பீரா ராம், சங்கர் லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரில் பீராராம், சங்கர் லால் ஆகியோர் 45சதவீதத்திற்கும் மேலாக தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!