Tamilnadu
சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் கடுமையாக தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் பீராராம். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இருவர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் வைத்து அடுப்பில் சப்பாத்தி சுடும்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த பீரா ராம், சங்கர் லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரில் பீராராம், சங்கர் லால் ஆகியோர் 45சதவீதத்திற்கும் மேலாக தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!