Tamilnadu
சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் கடுமையாக தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் பீராராம். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இருவர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் வைத்து அடுப்பில் சப்பாத்தி சுடும்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த பீரா ராம், சங்கர் லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரில் பீராராம், சங்கர் லால் ஆகியோர் 45சதவீதத்திற்கும் மேலாக தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க-வின் கோரிக்கையை இன்று கையில் எடுத்துள்ள இளைஞர்கள் : டெல்லியில் மாபெரும் போராட்டம் - முரசொலி!
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!