Tamilnadu
சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் கடுமையாக தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் பீராராம். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இருவர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் வைத்து அடுப்பில் சப்பாத்தி சுடும்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த பீரா ராம், சங்கர் லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரில் பீராராம், சங்கர் லால் ஆகியோர் 45சதவீதத்திற்கும் மேலாக தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!