Tamilnadu
பிரபந்தம் பாடுவதில் தகராறு.. காஞ்சிபுரம் கோவிலில் இரு பிரிவினரிடையே கைகலப்பு - முகம் சுழித்த பொதுமக்கள்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்போது, பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக் கொண்டனர்.
சித்ரா பௌர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற விழாவில், இரு பிரிவினருக்கிடையேயான மோதலால், இந்நிகழ்வை காண வந்த 1000க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முக சுள்ளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஒவ்வொரு பெரிய திருவிழாவின் போதும் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!