Tamilnadu
”சோஷியல் மீடியாவில் பகிர்வேன்”.. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (33). வாலிபரான இவர் தனது பகுதியில் இருக்கும் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ காட்டி, அந்த பெண்ணி மகளை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தபோது வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.
மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் செல்வத்தின் செல்போனையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!