Tamilnadu
மெக்கானிக் ஷாப்புக்கு செல்லும் போது நடந்த விபரீதம்.. நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அம்பாசிடர் கார் ஒன்றை பழுது பார்ப்பதற்காக வாலிகண்டபுரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது, கார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியைடைந்த செந்தில் உடனே காரி விட்டு கீழே இறங்கினார்.
பிறகு சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இது குறித்து போலிஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றும் கூடுவாஞ்சேரி அருகே தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இந்த கார் தீ பிடித்த உடனே இதில் இருந்த மூன்று பேரும் வெளிய வந்ததால் உயிர் தப்பியுள்ளனர்.
தற்போது கோடை காலம் என்பது வாகனங்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே வாகனங்களில் பெட்ரோல் டேங்கரில் எரிபொருளை முழுமையாக நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!