Tamilnadu
”ஆந்திரா தாய் வீடு.. தமிழ்நாடு புகுந்த வீடு" - அமைச்சராக பதவியேற்ற பின் தமிழ்நாடு வந்த ரோஜா உருக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை ரோஜா. ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்தது.
அப்போதே நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து அண்மையில் ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில், நடிகை ரோஜாவிற்கு முதல் முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மேலும் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று நடிகை ரோஜா தமிழ்நாடு வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த ஆந்திரா அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம், "ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே ஊழைப்பேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !