Tamilnadu
”ஆந்திரா தாய் வீடு.. தமிழ்நாடு புகுந்த வீடு" - அமைச்சராக பதவியேற்ற பின் தமிழ்நாடு வந்த ரோஜா உருக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை ரோஜா. ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்தது.
அப்போதே நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து அண்மையில் ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில், நடிகை ரோஜாவிற்கு முதல் முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மேலும் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று நடிகை ரோஜா தமிழ்நாடு வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த ஆந்திரா அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம், "ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே ஊழைப்பேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!
-
தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!