Tamilnadu
”ஆந்திரா தாய் வீடு.. தமிழ்நாடு புகுந்த வீடு" - அமைச்சராக பதவியேற்ற பின் தமிழ்நாடு வந்த ரோஜா உருக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை ரோஜா. ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்தது.
அப்போதே நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து அண்மையில் ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில், நடிகை ரோஜாவிற்கு முதல் முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மேலும் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று நடிகை ரோஜா தமிழ்நாடு வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த ஆந்திரா அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம், "ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே ஊழைப்பேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!