Tamilnadu
ஊருக்கு வந்த தம்பி.. வீட்டிற்கு அண்ணன் அழைத்து சென்றபோது நடந்த துயரம்.. சகோதரர்கள் பரிதாப பலி!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மூத்த மகன் மணிகண்டன். இளைய மகன் ஜெய்சூர்யா. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியூருக்குச் சென்றிருந்த தம்பி ஜெய்சூர்யாவை பேருந்து நிலையத்தில் இருந்து மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவர்கள் வாகனம் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி, அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெய்சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் இருந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் சகோதரர்கள் இரண்டு பேரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!