Tamilnadu
2 தலை.. 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - உரிமையாளர் அதிர்ச்சி: ஆர்வமுடன் பார்த்து செல்லும் கிராமமக்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதியினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களிடம் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.
இந்நிலையில் இவர்கள் வளர்த்து வரும் மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. இந்த கன்று குட்டியப் பார்த்து தம்பதியினர் ஆச்சரியடைந்துள்ளனர். இதற்கு காரணம் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையல் 4 கண்களுடன் கன்று குட்டி இருந்ததுதான்.
இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து புதிதாக பிறந்த கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் கன்று குட்டி இப்படி பிறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!