Tamilnadu
2 தலை.. 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - உரிமையாளர் அதிர்ச்சி: ஆர்வமுடன் பார்த்து செல்லும் கிராமமக்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதியினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களிடம் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.
இந்நிலையில் இவர்கள் வளர்த்து வரும் மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. இந்த கன்று குட்டியப் பார்த்து தம்பதியினர் ஆச்சரியடைந்துள்ளனர். இதற்கு காரணம் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையல் 4 கண்களுடன் கன்று குட்டி இருந்ததுதான்.
இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து புதிதாக பிறந்த கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் கன்று குட்டி இப்படி பிறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !