Tamilnadu
முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை - புதுச்சேரியில் நடந்த கொடூரம் : போலிஸ் தீவிர விசாரணை!
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆரியபாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலிலிஸார், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெதெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட போலிசார், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து இறந்த முதியவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!