Tamilnadu
முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை - புதுச்சேரியில் நடந்த கொடூரம் : போலிஸ் தீவிர விசாரணை!
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆரியபாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலிலிஸார், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெதெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட போலிசார், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து இறந்த முதியவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !