Tamilnadu

முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை - புதுச்சேரியில் நடந்த கொடூரம் : போலிஸ் தீவிர விசாரணை!

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆரியபாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலிலிஸார், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெதெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட போலிசார், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இறந்த முதியவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பதுங்குகுழியில் பதுங்கிய ராஜபக்ஷேக்கள்.. மத - இனவாத அரசால் வீழ்ந்த சிங்கள மக்கள்” : முரசொலி கடும் சாடல்!