Tamilnadu
“கூல்ட்ரிங்க்ஸில் மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்” : 5 பேரை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!
தனியார் கல்லூரி மாணவிகள் குளர்பானத்தில் வெளி மாநில மதுபானத்தை கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
செங்கல்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரியில் மதுபானம் குடித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகளுக்கு உடன் படிக்கும் ஆண் நண்பர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!