Tamilnadu
“கூல்ட்ரிங்க்ஸில் மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்” : 5 பேரை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!
தனியார் கல்லூரி மாணவிகள் குளர்பானத்தில் வெளி மாநில மதுபானத்தை கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
செங்கல்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரியில் மதுபானம் குடித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகளுக்கு உடன் படிக்கும் ஆண் நண்பர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!