Tamilnadu
“கூல்ட்ரிங்க்ஸில் மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்” : 5 பேரை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!
தனியார் கல்லூரி மாணவிகள் குளர்பானத்தில் வெளி மாநில மதுபானத்தை கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
செங்கல்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரியில் மதுபானம் குடித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகளுக்கு உடன் படிக்கும் ஆண் நண்பர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!