Tamilnadu
மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற நபரை வெளுத்து எடுத்த நெல்லை பெண் - குவியும் பாராட்டு!
நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் நேற்று நெல்லை பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப்பெண் மணிகண்டனை கடுமையாக தாக்கி திட்டியுள்ளார். உடனே சக பயணிகளும் மணிகண்டனை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்து மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும் ஆத்திரத்தில் தாங்க முடியாத அந்த பெண் போலிஸார் கண்முன்னேயே மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் போலிஸார் மணிகண்டனை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். தற்போது மணிகண்டன் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
பொது இடத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை தனி ஆளாக எதிர் கொண்ட பெண்ணின் இச்செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!