Tamilnadu
“பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - கணக்கு ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு” : போலிஸ் எடுத்த அதிரடி!
கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் 1 வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வருபவர் துளசிராமன் இவர் உதவி தலைமை ஆசிரியர் ஆவார்.
இந்தநிலையில், துளசிராமன் கடந்த 3 மாதங்களாக பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் 15 சிறுமிகளை பாலியல் சீண்டல், செய்து வந்துள்ளார். இதனால் சிறுமிகள் கடுமையாக இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர். இதனை மாணவிகள் பெற்றோர்களிடம் அவ்வப்போது தெரிவித்தும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரே நாளில் 15 சிறுமிகளை ஆசிரியர் துளசிராமன் பாலியல் சீண்டல் தூண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒன்றுகூடி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் வானவரெட்டி அரசு தொடக்கப் பள்ளிக்குச் ஆசிரியர் துளசிராமனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்து உள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!