Tamilnadu
'புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்..' : முன்னாள் காதலியை மிரட்டிய வாலிபர் : 'காப்பு' மாட்டிய போலிஸ்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் திருமணத்திற்கு முன்பு மணிகண்டன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் சந்தியா வேறு நபரைத் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் மணிகண்டன் தொடர்ந்து சந்தியாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
பின்னர் மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என காதலன் மிரட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!