Tamilnadu
தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலை எப்போது வரும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல் !
தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சனிக்கிழமைதோறும் 25 தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 26 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், அரியலூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் 100% கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்து 61 ஆயிரத்து 287 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரத்து 690 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா 4வது அலை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதனைத் தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!