Tamilnadu

மனைவியுடன் தகராறு.. குடிபோதையில் தன்னைத்தானே தீ வைத்து எரித்துக்கொண்ட கணவன் - ‘பகீர்’ சம்பவம்!

விருத்தாசலம் மாவட்டம் குருவன்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமரன் (40). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை குடிக்க மட்டுமே செலவிட்டு வந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி வழக்கம்போல, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் தம்பதியர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஆனந்த் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “உங்களுக்கு இங்க என்ன வேலை?” : RSS இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்த கடலூர் மக்கள் - பின்னணி என்ன?