Tamilnadu
16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!
அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பு ராஜ். ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் பக்கத்து ஊருக்கு ஜேபிசி வேலை செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்புவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!