Tamilnadu
16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!
அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பு ராஜ். ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் பக்கத்து ஊருக்கு ஜேபிசி வேலை செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்புவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!