Tamilnadu
16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!
அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பு ராஜ். ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் பக்கத்து ஊருக்கு ஜேபிசி வேலை செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்புவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also Read
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
-
🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..
-
“பிளவுவாதம், பிரிவினைவாதம், வகுப்புவாதம் மட்டும்தாம் மோடிக்கு தெரியும்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”