Tamilnadu
16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!
அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பு ராஜ். ஜேசிபி ஆபரேட்டரான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் பக்கத்து ஊருக்கு ஜேபிசி வேலை செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இரும்புலிகுறிச்சி போலிஸார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்புவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!