Tamilnadu
பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? : மக்களவையில் தி.மு.க MP சரமாரி கேள்வி!
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை தடுக்க ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனநாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் பின்வருமாறு:
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரண மக்களவையில் தயாநிதி மாறன் கேள்விமாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் இருந்து இந்திய நுகர்வோர்களை காப்பதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.
ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து இந்திய எரிபொருள் சந்தையை பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த அல்லது எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். உலகளாவிய சூழ்நிலை காரணமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலையினை குறைப்பதற்கோ அல்லதுஇந்திய நுகர்வோர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா எனவும் எனில்அது குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும்.
இவ்வாறு தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!