Tamilnadu
திடீரென தீப்பற்றி எரிந்த கரும்புத்தோட்டம்.. முழுவதுமாக கருகி நாசம் - நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்துள்ளார்.
கரும்பு முதிர்வடைந்து ஆலைக்கு வெட்டும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் இன்று கரும்பு காட்டிற்கு மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் கரும்புக் காட்டில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்தது.
கொளுத்தும் வெயிலில் பற்றி எறிந்த நெருப்பை பார்த்த மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் வெப்பத்தின் தாக்கம், தொடர் காற்று ஆகியவற்றால் தீ முழுவதுமாக எரிந்து கரும்புத் தோட்டம் நாசமானது. மின் கம்பி அறுந்து விழுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
வெட்டுவதற்குத் தயார் நிலையில் இருந்த கரும்புத்தோட்டம் எரிந்து நாசமானது அப்பகுதியினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!