Tamilnadu
"தவறியும் இதைச் செய்துவிடாதீர்கள்” : வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்ட SBI !
தொழில்நுட்பங்கள் பல பெருகியுள்ள நிலையில், பல்வேறு தளங்கள் மூலமாக மோசடியாளர்கள் ஊடுருவி வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களையும், பணத்தையும் திருடி வருகின்றனர்.
அதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கும் வகையில், எஸ்.பி.ஐ எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் வங்கிக் கணக்கு தொடர்பானதாக வரும் இணைப்புகளை (links) க்ளிக் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, KYC அப்டேட் என்ற பெயரில் உட்பொதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் சில நேரங்களில் ஆன்லைன் மோசடிகள் நிகழ வாய்ப்புள்ளது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அப்படி இந்த சேவைகளை செய்ய வேண்டும் என்றால் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் சென்று முறையாக செய்யுங்கள் என வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் QR குறியீடுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. QR குறியீடு யாரிடமிருந்தோ வந்தால் தவறுதலாக ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் இழக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!