Tamilnadu
கழக அரசின் இரண்டாவது பட்ஜெட் : இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்!
தமிழக சட்டப் பேரவை இன்று (18.3.2022) கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (18.3.2022) தொடங்குகிறது. இன்று (18.3.2022) காலை 10 மணிக்கு 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவிப்பார்.
சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!