Tamilnadu
'இது கூட தெரியாதா?'.. சட்டமன்றத்தில் EPS, OPS-யை வறுத்தெடுத்த சபாநாயகர் அப்பாவு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் 2022 - 2023) நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது நிதியமைச்சர் தனது உரையை துவங்கும்போது, பேரவையிலிருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, அமளியில் ஈடுபடாமல் பட்ஜெட் உரையைக் கேட்கும்படி அ.தி.மு.க உறுப்பினர்களிடம் கூறினார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர், 'அவையின் மரபை அ.தி.மு.க உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கூறும் கருத்துக்கள் எதுவும் அவைக்குறிப்பில் இடம் பொறாது.
இன்று நிதிநிலை அறிக்கை மட்டும்தான் தாக்கல் செய்யப்படும். இது உங்களுக்கே தெரிந்தும் அமளி செய்வது சரிதானா?, எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்தவர். அவையின் நடவடிக்கைகள் அவருக்கு நன்கு தெரியும். இருந்தும் இப்படிச் செய்யலாமா?' என கூறினார். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!