Tamilnadu
ப்ளீஸ் சார் போகாதீங்க.. கற்றுக்கொடுத்த ஆங்கிலப் பாடலை பாடி ஆசிரியருக்கு பிரியாவிடை - நெகிழ்ச்சி சம்பவம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது வடதொரசலூர் கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த கண்ணன். இவர் மாணவ மாணவிகளுக்காக தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வி முறையின் மூலம் ஆங்கிலத்தை மிக எளிமையாக நடத்தி வந்துள்ளார்.
மேலும் கிராமத்திலிருந்து வரும் மாணவ மாணவிகளும் எளிமையாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி அவர்களை சரளமாக உரையாடவும் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று அவருக்கு பணி மாறுதல் ஆணை வந்தது இதனால் அங்கிருந்து வேறு வழியில்லாமல் அடுத்த பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தார்.
இதையறிந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு விடாமல் செல்ல வேண்டாம் என்று அழுதுகொண்டே கோரிக்கை வைத்தனர். உடனடியாக அங்கு வந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பணி மாறுதலில் செல்வதால் உங்களைப் போன்ற அந்தப் பள்ளி மாணவர்களும் பயனடைய வேண்டும். எனவே அவரை அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மாணவ - மாணவியர்கள் இறுதியாக அவர் எளிதாக ஆங்கிலம் படிக்கும் வகையில், சொல்லிக்கொடுத்த ஆங்கிலப் பாடலை கண்ணீருடன் பாடினார்கள் இந்த சம்பவம் அந்தப் பள்ளியை மட்டுமல்லாது அந்த கிராமத்தையே நெகிழச் செய்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. வடதொரசலூர் உயர்நிலைப் பள்ளியில் 2017 முதல் ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வரும் ஆனந்த கண்ணன் தமிழக அரசின் மாநில அளவில் கனவு ஆசிரியர் விருது மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !