Tamilnadu
‘ஆள் இல்லாத வீடுகள்தான் டார்கெட்; நோட்டமிட்டு சொல்லும் மனைவி’: கூட்டாளியுடன் துணிகர கொள்ளை- நடந்தது என்ன?
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் உள்ள பாபாஜ் என்பவர் வீட்டில் கடந்த 3ம் தேதி மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, பாபாஜை தாக்கி அங்கிருந்து தங்க செயின், மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாபாஜ் கொளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் என அடையாளம் கண்டு, இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், செல்போன், பைக் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையில் பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தகவலை தனது கணவரிடம் கூறியுள்ளது. அதன்படி பாலாஜி தனது கூட்டாளி கார்த்தியுடன் சேர்ந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!