Tamilnadu
‘ஆள் இல்லாத வீடுகள்தான் டார்கெட்; நோட்டமிட்டு சொல்லும் மனைவி’: கூட்டாளியுடன் துணிகர கொள்ளை- நடந்தது என்ன?
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் உள்ள பாபாஜ் என்பவர் வீட்டில் கடந்த 3ம் தேதி மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, பாபாஜை தாக்கி அங்கிருந்து தங்க செயின், மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாபாஜ் கொளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் என அடையாளம் கண்டு, இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், செல்போன், பைக் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையில் பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தகவலை தனது கணவரிடம் கூறியுள்ளது. அதன்படி பாலாஜி தனது கூட்டாளி கார்த்தியுடன் சேர்ந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!