Tamilnadu
கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்து இறந்த மயில்கள்.. போலிஸ் அதிரடி நடவடிக்கை - நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூரை அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவித்திரி என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து சண்முகம் (71) என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை வளர்த்து வந்துள்ளார். நெற்பயிர்களை எலிகள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயி எலிகளை கொள்ளுவதற்காக நெல்லில் விஷத்தைக் கலந்து வைத்துள்ளார்.
அப்போது இரை தேடி வந்த 12 மயில்கள் அதனை சாப்பிட்டு ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையின, மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்ற சண்முகம் என்ற விவசாயியை கைது செய்தனர்.
மேலும் 12 மயில்களை எடுத்து வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்ச்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!