Tamilnadu
கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்து இறந்த மயில்கள்.. போலிஸ் அதிரடி நடவடிக்கை - நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூரை அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவித்திரி என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து சண்முகம் (71) என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை வளர்த்து வந்துள்ளார். நெற்பயிர்களை எலிகள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயி எலிகளை கொள்ளுவதற்காக நெல்லில் விஷத்தைக் கலந்து வைத்துள்ளார்.
அப்போது இரை தேடி வந்த 12 மயில்கள் அதனை சாப்பிட்டு ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையின, மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்ற சண்முகம் என்ற விவசாயியை கைது செய்தனர்.
மேலும் 12 மயில்களை எடுத்து வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்ச்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!