Tamilnadu
"போலிஸில் சிக்கக் கூடாது" .. சாமி கும்பிட்டுப் பணத்தைத் திருடிய நபர்: பெட்ரோல் பங்கில் நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் சாலையில், பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் வேல்முருகன், கிருஷ்ணன் ஆகியோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு யாரும் பெட்ரோல் போட வராததால் சிறிது நேரம் தூங்கியுள்ளனர். பிறகு எழுந்து பார்த்தபோது பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலிஸார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்கில் இருக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கிருக்கும் சாமி படத்தின் முன்பு கை எடுத்துக் கும்பிட்டு விட்டு பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் பட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரமேஷ்குமார் மீது திருட்டு, வழிபறி உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!