Tamilnadu
“உஷாரய்யா உஷாரு” : கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. பிடிபட்டது எப்படி?
மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து முத்தனேந்தல் பகுதிக்கு வந்தபோது இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பேருந்தில் இருந்தவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு அவசர அவசரமாகக் கீழே இறங்கினர்.
அப்போது, பேருந்து படிக்கட்டின் அருகே நின்றிருந்த நடத்துநரை இடித்துத் தள்ளிவிட்டு அவருக்குத் தெரியாமல், நடத்துநருக்கான பணப் பையிலிருந்து ரூ. 2 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
இதை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் பார்த்து நடத்துநரிடம் கூறியுள்ளார். உடனே பேருந்தில் இருந்தவர்கள் அந்த நான்கு பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை மானாமதுரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இந்த நான்கு பேரும் கூட்டமாக இருக்கும் பேருந்துகளில் ஏறி ஏமாறும் பயணிகளிடம் பணத்தைத் திருடிவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 பேர் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!