Tamilnadu
குடிபோதையில் தகராறு.. சமையல் கத்தியால் சித்தப்பாவை சரமாரியாக குத்தி கொலை செய்த மகன் - ‘பகீர்’ சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூர், போளூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (60). இவர் செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தங்கி மேஸ்தரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சார்ந்த அவரது அண்ணன் மகன் ராமதாஸ் என்பவர் குடிபோதையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இறந்த குமாரும் அவரது அண்ணண் மகன் ராமதாஸ் வெங்கடேஸ்வர நகரில் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்திருந்த நிலையில், தங்கியிருந்த இடத்தில் இருவரும் சேர்ந்து குடித்துவிட்டு குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ் அவருடைய சித்தப்பா குமாரை வயிறு மற்றும் கை பகுதியில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, கொலையாளி ராமதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!