Tamilnadu
கடலில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்: நடந்தது என்ன?
சென்னை திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஸ். அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் ஆகாஷ் மற்றும் ஹரிஸ் சிக்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் ராட்சத அலை அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. பின்னர் கடற்கரையில் ரோந்து பணியில் இருந்து போலிஸாரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடம் போலிஸார் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சகோதரர்களைச் சடலமாகவே மீட்கமுடிந்தது. இதையடுத்து இருவரது உடலும் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கடல் அலையில் சிக்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!