Tamilnadu
கடலில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பிக்கு நேர்ந்த சோகம்: நடந்தது என்ன?
சென்னை திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஸ். அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் ஆகாஷ் மற்றும் ஹரிஸ் சிக்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் ராட்சத அலை அவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. பின்னர் கடற்கரையில் ரோந்து பணியில் இருந்து போலிஸாரிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடம் போலிஸார் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சகோதரர்களைச் சடலமாகவே மீட்கமுடிந்தது. இதையடுத்து இருவரது உடலும் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கடல் அலையில் சிக்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!