Tamilnadu
இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து Instagram-ல் பதிவேற்றம்.. வாலிபரை தூக்கிய போலிஸ்!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது சில புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த அந்தப் பெண்ணின் நண்பர்கள் இதுகுறித்து அவருக்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணும் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் புகைப்படம் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கொண்டு மர்ம நபரை தேடிவந்தனர்.
இதையடுத்து முனீஸ்வரன் என்ற வாலிபர்தான் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!