Tamilnadu
இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து Instagram-ல் பதிவேற்றம்.. வாலிபரை தூக்கிய போலிஸ்!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது சில புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த அந்தப் பெண்ணின் நண்பர்கள் இதுகுறித்து அவருக்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணும் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் புகைப்படம் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கொண்டு மர்ம நபரை தேடிவந்தனர்.
இதையடுத்து முனீஸ்வரன் என்ற வாலிபர்தான் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!