Tamilnadu
சோதனைக்கு பயந்து கடத்தல் தங்கத்தை மறைத்த பயணி; ரூ.21.50 லட்சம் மதிப்பு தங்கப்பசை சிக்கியது எப்படி?
துபாயிலிருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் விமானத்தை சுத்தம் செய்வதற்காக சென்ற துப்புரவு பணியாளர் ஒருவர் விமானத்தின் இருக்கையில் பண்டில் போன்று ஒன்று உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்த போது இருக்கைக்கு அடியில் பேண்டேஜ் சுற்றப்பட்டது போன்று பேஸ்ட் படிவமாக தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதனை கைப்பற்றிய அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து இருக்கையில் வைத்து சென்றதாக தெரிய வந்திருக்கிறது.
கைப்பற்றப்பட்ட தங்கமானது 421 கிராம் எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 21.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து விமானத்தின் இருக்கையில் தங்கத்தை வைத்து சென்ற பயணி குறித்து பயண விவரங்களை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !