Tamilnadu

பெண் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்.. புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?

தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் முத்துப்பேச்சி. இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இவர் குறித்துப் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததை அடுத்து மாரியப்பன் காவல் நிலையத்தில் மகள் காணவில்லை என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பக்கத்து வீட்டின் அருகே முத்துப்பேச்சியின் சேலை கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் வருவாய்த் துறையினர் முன்னிலையில் அப்பகுதியில் தோண்டியபோது சடலம் ஒன்று இருந்து. பின்னர் அந்தச் சடலத்தை மீட்ட போலிஸார் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து அந்த சடலம் காணாமல்போன முத்துபேச்சிதான் என்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து யார் அவரை கொலை செய்து புதைத்தனர் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வாட்ஸ் அப்பில் பெண் குரலில் பேசி ரூ.14.62 லட்சம் சுருட்டல்; சென்னை போலிஸ் வலையில் சிக்கிய உ.பி., பிரதர்ஸ்