Tamilnadu
மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் முன்னாள் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமான டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தது குறித்த அப்பெண்மணி புகார் தெரிவித்த நிலையில், அப்பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டி சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி தேசிய செயலர் நிதி திரிபாதியை மருத்துவக் சுப்பையா சிறையில் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறிய புகாரில் மருத்துவர் கல்வி இயக்குநரகம் மருத்துவர் சுப்பையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. துறை ரீதியான விசாரணை நடைபெறும் வரை பணியிடை நீக்கம் தொடரும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!