Tamilnadu
மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் முன்னாள் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமான டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு செய்தது குறித்த அப்பெண்மணி புகார் தெரிவித்த நிலையில், அப்பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டி சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி தேசிய செயலர் நிதி திரிபாதியை மருத்துவக் சுப்பையா சிறையில் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு ஊழியருக்கான நடத்தை விதியை மீறிய புகாரில் மருத்துவர் கல்வி இயக்குநரகம் மருத்துவர் சுப்பையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. துறை ரீதியான விசாரணை நடைபெறும் வரை பணியிடை நீக்கம் தொடரும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!