Tamilnadu
பேருந்தை முந்தி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் இன்று ராமநாதபுரம் - தேவிப்பட்டிணம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ரஞ்சனி முந்தி செல்ல முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் ரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !