Tamilnadu
பேருந்தை முந்தி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் இன்று ராமநாதபுரம் - தேவிப்பட்டிணம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ரஞ்சனி முந்தி செல்ல முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் ரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!