Tamilnadu
பேருந்தை முந்தி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் இன்று ராமநாதபுரம் - தேவிப்பட்டிணம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை ரஞ்சனி முந்தி செல்ல முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் ரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !