Tamilnadu
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை.. அதே கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை : காரணம் என்ன?
சேலம் மாவட்டம், கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மரகதம். இந்த தம்பதிக்கு செல்வகணபதி, கோகுலகண்ணன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியை திட்டிவிட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் பிரபாகரன். பிறகு கோபம் தணிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தைகள் மற்றும் மனைவி காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து மூன்று பேரையும் அக்கம், பக்கம் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குழந்தைகள் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி மூன்று பேரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் குடும்ப தகராறு காரணமாகவே குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
-
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
-
மணிப்பூர் - பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரம் :CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
-
10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? : பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!