Tamilnadu
தோல்வி பயத்தில் திமுக வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி.. செங்கல்பட்டில் அராஜகம்!
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் முனுசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.கவினர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியின் 27 வார்டில் தி.மு.க சார்பில் முனுசாமி போட்டியிடுகின்றார். இன்று காலை குண்டூர் மேட்டுத் தெரு பகுதியில் இவரும், தி.மு.க நிர்வாகியான ஆரோக்கியசாமி ஆகியோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க நகரச்செயலாளரும், அ.தி.மு.க 27 வார்டு வேட்பாளரின் கணவருமான செந்தில்குமார் மற்றும் அவருடன் வந்த நபர்கள் முனுசாமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் முனுசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனவும் தன்னை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
தோல்வி பயத்தில் தி.மு.க வேட்பாளரை அ.தி.மு.க நகர செயலாளர் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!