Tamilnadu
தோல்வி பயத்தில் திமுக வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி.. செங்கல்பட்டில் அராஜகம்!
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் முனுசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.கவினர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியின் 27 வார்டில் தி.மு.க சார்பில் முனுசாமி போட்டியிடுகின்றார். இன்று காலை குண்டூர் மேட்டுத் தெரு பகுதியில் இவரும், தி.மு.க நிர்வாகியான ஆரோக்கியசாமி ஆகியோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க நகரச்செயலாளரும், அ.தி.மு.க 27 வார்டு வேட்பாளரின் கணவருமான செந்தில்குமார் மற்றும் அவருடன் வந்த நபர்கள் முனுசாமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் முனுசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனவும் தன்னை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
தோல்வி பயத்தில் தி.மு.க வேட்பாளரை அ.தி.மு.க நகர செயலாளர் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!