Tamilnadu
தோல்வி பயத்தில் திமுக வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி.. செங்கல்பட்டில் அராஜகம்!
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் முனுசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.கவினர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியின் 27 வார்டில் தி.மு.க சார்பில் முனுசாமி போட்டியிடுகின்றார். இன்று காலை குண்டூர் மேட்டுத் தெரு பகுதியில் இவரும், தி.மு.க நிர்வாகியான ஆரோக்கியசாமி ஆகியோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க நகரச்செயலாளரும், அ.தி.மு.க 27 வார்டு வேட்பாளரின் கணவருமான செந்தில்குமார் மற்றும் அவருடன் வந்த நபர்கள் முனுசாமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் முனுசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனவும் தன்னை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க நகர செயலாளர் செந்தில்குமார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
தோல்வி பயத்தில் தி.மு.க வேட்பாளரை அ.தி.மு.க நகர செயலாளர் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!