Tamilnadu
டீ கடை வைக்க கொள்ளையர்களாக மாறிய பொறியாளர்கள்: விசாரணையில் போலிஸ் அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வெப்படை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் போலிஸார் பள்ளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், தனியாக செல்லும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்தது ராஜூ, அருண் என்ற வாலிபர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் பெரிய அளவில் டீ கடை வைக்க வேண்டும் என்பதற்காகவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலிஸார் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைக் கைது செய்த போலிஸாருக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கலைஞரை பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!
-
தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!
-
51-ஆ அல்லது 52-ஆ? : சொந்த வயதைக் கூட சரியாகக் குறிப்பிடாத விஜய்!
-
2026 தேர்தல் : திமுக கூட்டணியில் களமிறங்கும் 28 பேர்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் உள்ளே!