Tamilnadu
டீ கடை வைக்க கொள்ளையர்களாக மாறிய பொறியாளர்கள்: விசாரணையில் போலிஸ் அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வெப்படை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் போலிஸார் பள்ளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், தனியாக செல்லும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்தது ராஜூ, அருண் என்ற வாலிபர்கள்தான் என்பது தெரியவந்தது. மேலும் பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் பெரிய அளவில் டீ கடை வைக்க வேண்டும் என்பதற்காகவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலிஸார் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைக் கைது செய்த போலிஸாருக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
-
“தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளை பார்த்து எரிச்சல் அடையும் பழனிசாமி” - முரசொலி விமர்சனம்!
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - Germany-ல் முதலமைச்சர் கோரிக்கை!