Tamilnadu
“வாடகைக்கு வந்த கார் ஓட்டுநரை கொலை செய்த கோவை தம்பதி” : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் - நடந்தது என்ன?
கோவை மாவட்டம் வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சனு. இவர் தனியார் டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் சனு உயிரிழந்ததாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை ஆய்வு செய்தனர். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்பட்டது. விசாரணையில் 8ம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸில் பயணித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில், பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவமும் சேர்ந்து ஓட்டுரை கட்டையால் தாக்கி விஷ் ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!