Tamilnadu
காதல் திருமணம் செய்த தங்கை.. கார் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது சித்தியின் மகள் திவ்யா. தங்கையான இவர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு தனது கணவருடன் திவ்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முரளி மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகியோர் அவர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.
இதையடுத்து போலிஸார் முரளி மற்றும் பெருமாளைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெருமாள் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி அப்துல்காதர், முரளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!