Tamilnadu
சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகளுக்கு யெச்சூரி பாராட்டு!
சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு அமைத்திட மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
அன்பார்ந்த மு.க.ஸ்டாலின், 2022 பிப்ரவரி 2 ஆம் நாளிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. தேசிய அளவில் கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் கொள்கைகளை எய்துவதற்காக செயல்படும் அனைத்துத் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் அது போன்று இயங்கிடும் தனிநபர்கள், அமைப்புகள் அனைத்தையும் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்னும் ஒரே மேடையில் கொண்டு வருவதற்காகத் தாங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனினும், இப்பிரச்சினைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கலந்தாலோசனைகள் தேவைப்படுகின்றன. சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், நம் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது போல் அனைவருக்கும், அவர்களின் “சாதி, மதம் அல்லது பாலின வித்தியாசங்கள் எதுவுமின்றி” சம வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்திடவும், சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தாங்கள் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களை எய்தக்கூடிய விதத்தில் கலந்தாலோசனைகளை மேற்கொள்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!