Tamilnadu
திடீரென மயங்கி விழுந்த யானை.. கூடாரம் அமைத்து உடனடி சிகிச்சையில் ஈடுபட்ட வனத்துறை : நடந்தது என்ன ?
கோவை மாவட்ட, அனுவாவி சுப்பிரமணியன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று நடக்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்று மக்கள் பார்த்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் உடனே அங்கு வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடல்நலக்குறைவால் பெண் யானை மயங்கி விழுந்தது தெரியவந்தது. பிறகு யானைக்குச் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவக் குழுவினர் அங்கு வந்து யானைக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் யானை விழுந்த இடத்திலேயே கூடாரம் ஒன்று அமைத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கும், வனத்துறைக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!