Tamilnadu
மனைவியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த முதியவர்.. காணவில்லை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?
தேனி மாவட்டம், தளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சக்கொடி. முதியவர்களான இந்த தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் மனைவி அம்சக்கொடியை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளார்.
இதையடுத்து உறவினர்களிடம் மனைவி காணவில்லை என தெரிவித்துள்ளார். இவரைப் பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தனது தோட்டத்திலேயே சாக்கு மூட்டையில் கட்டி புதைத்துள்ளார்.
பின்னர் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு வேலை செய்தவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் துர்நாற்றம் வீசிய பகுதியில் தோண்டி பார்த்தபோது காணாமல் போனதாகக் கூறிய அம்சக்கொடியின் உடல் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கணவனிடம் விசாரணை நடத்தியபோது, மனைவியை அடித்துக் கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் போலிஸார் கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !