Tamilnadu
PUBG விளையாடிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு - ஆத்திரத்தில் முதியவர் செய்த விபரீதம் : நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பாறைக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளைஞர்கள் அனைவரும் அதிகமாகச் சத்தம்போட்டு விளையாடியுள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமசாமி என்ற முதியவர் இவர்களிடம் 'தூங்க முடியவில்லை. சத்தம் போடாமல் விளையாடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் முதியவருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது பெற்றோர் போலிஸாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் ராமசாமியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!