Tamilnadu
PUBG விளையாடிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு - ஆத்திரத்தில் முதியவர் செய்த விபரீதம் : நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பாறைக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளைஞர்கள் அனைவரும் அதிகமாகச் சத்தம்போட்டு விளையாடியுள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமசாமி என்ற முதியவர் இவர்களிடம் 'தூங்க முடியவில்லை. சத்தம் போடாமல் விளையாடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் முதியவருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது பெற்றோர் போலிஸாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் ராமசாமியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!