Tamilnadu
PUBG விளையாடிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு - ஆத்திரத்தில் முதியவர் செய்த விபரீதம் : நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பாறைக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளைஞர்கள் அனைவரும் அதிகமாகச் சத்தம்போட்டு விளையாடியுள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமசாமி என்ற முதியவர் இவர்களிடம் 'தூங்க முடியவில்லை. சத்தம் போடாமல் விளையாடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் முதியவருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது பெற்றோர் போலிஸாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் ராமசாமியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!