Tamilnadu
“6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது” : போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி - மாலா பெயர் மாற்றப்பட்டுள்ளது. தம்பதில் . இதில் ரவி பெயின்ட்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலா தனியார் ரெடிமேட் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிசெய்து வருகிறார்.
இவர்களுக்கு 10 வயதில் மகனும் மற்றும் 6 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது தாயாரிடம் விட்டுவிட்டு கணவன் மனைவி வேலைக்கு சென்றுள்ளனர், மாலை திரும்பி வரும்போது தனது தாயிடம் 6 வயது பெண் குழந்தை, தான் விளையாடி கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டு நபர் பனங்கிழங்கு பிடிங்கி தருவதாக அழைத்துக்கொண்டுபோய் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தான் சாத்தம்மிடவே தன்னை மீண்டும் வீட்டருகே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன மாலா உடனடியாக தனது கணவருடன் சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தப்பியோடிய பாபு (50) என்பவரை தேடிவந்த நிலையில், இன்று கைது செய்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விசாரணை மேற்க்கொண்ட மகளிர் காவல்துறையினர் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் பின்னர் குற்றவாளி பாபு மீது போச்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !