Tamilnadu
“6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது” : போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி - மாலா பெயர் மாற்றப்பட்டுள்ளது. தம்பதில் . இதில் ரவி பெயின்ட்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலா தனியார் ரெடிமேட் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிசெய்து வருகிறார்.
இவர்களுக்கு 10 வயதில் மகனும் மற்றும் 6 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது தாயாரிடம் விட்டுவிட்டு கணவன் மனைவி வேலைக்கு சென்றுள்ளனர், மாலை திரும்பி வரும்போது தனது தாயிடம் 6 வயது பெண் குழந்தை, தான் விளையாடி கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டு நபர் பனங்கிழங்கு பிடிங்கி தருவதாக அழைத்துக்கொண்டுபோய் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தான் சாத்தம்மிடவே தன்னை மீண்டும் வீட்டருகே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன மாலா உடனடியாக தனது கணவருடன் சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தப்பியோடிய பாபு (50) என்பவரை தேடிவந்த நிலையில், இன்று கைது செய்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விசாரணை மேற்க்கொண்ட மகளிர் காவல்துறையினர் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் பின்னர் குற்றவாளி பாபு மீது போச்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !